உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Saturday, March 26, 2011

மல்லிகைத் தோட்டம்

காலைத் தென்றலில் கலந்திருந்த
உன் மணம் எழுப்பியது
உறங்கிக்கொண்டிருந்த
என் உயிர் தொட்டு - பார்த்தால்
அளவில்லா மலர்களை அள்ளிச்
சூடிக்கொண்டு அமைதியாய்
என் கண்முன்னே நீ

மாலை நீ சூடிய மல்லியில்
தேனெடுக்க
உன்னையே சுற்றிச் சுற்றி வந்த
வண்டின் ரீங்காரம்
இரெவெல்லாம்
காதுகளுக்குத் தேன் மதுரமாய்

ஓலைகளில் மாளிகை கட்டிக்
குடியேரியச் சிட்டுக்கள்
விடியலுக்கு முன் இறைதேடிச் செல்ல
விழித்தேன் உன் எதிரில்

இரெவெல்லாம் இளவரசியாய் இருந்தவள்
உதிரத்தொடிங்கினால் விடியலை எதிர்பார்த்து
அவளுக்கு மேல்
பனிநீரில் இரவெல்லாம் குளித்து விட்டு
மாலைப் பொழுதை எதிர் பார்த்து
மலர்வதர்க்காக ஒரு மொட்டு