உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Friday, October 18, 2013

அதிக சம்பளமும், ஆடம்பர பொருட்களும் மட்டுமே வாழ்க்கையில்லை

தரமணியில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்த கேரளத்தைச் சேர்ந்த பெண், மன அழுத்தம் காரணமாக 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தரமணியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ரேஷ்மா (24), மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். புதன்கிழமை இரவு தான் பணியாற்றிய நிறுவனத்தின் 10-வது மாடியில் இருந்த கேன்டீனுக்கு சென்ற ரேஷ்மா, திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தரமணி காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அதிக மன அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, "ரேஷ்மா கேரளத்தைச் சேர்ந்தவர். ரேஷ்மா தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணம் இல்லை என்று உறுதியாக கூறினர். அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, ரேஷ்மா எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில் அதிக வேலைப் பளுவால் தற்கொலை செய்கிறேன் என்று எழுதி இருந்தார்.
பெற்றோரிடம் செல்போனில் பேசும்போதும் அதிக வேலை இருக்கிறது என்று பலமுறை கூறியிருக்கிறார். எனவே, அதிக வேலையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால்தான் அவர் தற்கொலை செய்திருக்கிறார்' என்றனர்.
கடந்த 6 மாதங்களில் மட்டும் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பணி செய்பவர்களில் 27 பேர் தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஐ.டி. பணியால் ஏற்பட்ட அதிக மன அழுத்தத்தால் தற்கொலை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை தடுப்பிற்கான 'சிநேகா' என்ற தொண்டு நிறுவன அதிகாரி சங்கர் கூறும்போது, "அதிக சம்பளமும், ஆடம்பர பொருட்களும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை ஐ.டி. இளைஞர்கள் உணர வேண்டும். போராடும் குணமும், தன்னம்பிக்கையும் ஐ.டி. இளைஞர்கள் பலரிடம் இருப்பதில்லை.
கணினி விளையாட்டுகளை அதிகமாக விளையாடும் இளைஞர்கள் அதில் தோல்வி அடையும் நிலை வரும்போது சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். ஆனால் வெளியில் வந்து சக மாணவர்களுடன் விளையாடும்போதுதான் தோல்வி, சகிப்புத் தன்மையை அவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
இதேப் போல ஐ.டி. வேலையில் இருப்பவர்கள் தொழிலை தாண்டி மனம் விட்டு பேசும் வகையில் நல்ல நண்பர்களையும், உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்வது நல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 044-24640050 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் பேசலாம். இது முற்றிலும் இலவச சேவை. பேசுபவரின் பெயர் விவரங்களைக் கூட தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார். 
இ.டி. நிறுவனங்களில் நமது இளைஞர்கள் பெருமளவில் பணிபுரிந்து வருகிறார்கள் . நம் நாட்டு பண்பாடு கலாசாரம் ஆகியவற்றை புறம் தள்ளி, பொட்டு வைப்பதும் இல்லை, தலைமுடியை விரிந்த கோலத்தில் வைத்திருப்பதும் அயல் நாட்டு மோகமும் வரண்முறையில்லாத பணி நேரமும் நம் நாட்டு இளைஞர்களை சீரழித்துள்ளது என்பதும் உண்மை.எட்டுமணி நேரம் என்பதும் விடுமுறை என்பதும் நம் நாட்டு தொழிலாளர் நல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் இருப்பதில்லை .அதனை கண்காணிக்கும் அமைப்பும் சரியாக செயல்படுவதில்லை.அதிலும் குறிப்பாக பெண் பணியாளர்களின் நிலை மிக மிக மோசம்.பெண்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாதங்கள் வழங்காமல் இருப்பதையும் பிரசவத்திற்கு முன்பாக பணிவிலக கட்டாயபடுத்தும் நிலைதான் உள்ளது.சரியான நேரத்தில் உணவு உண்ணும் வழக்கமும் உறக்கமும் இல்லாததால் நமது இளைஞர்களின் எதிர்காலம் சூன்யமாக மாறுகிறது என்பதை உணர்ந்து இ.டி. நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும் .பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை .அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும் தற்கொலை செய்துகொள்வதும் தடுக்கப்படவேண்டும்.தடுக்கப்பட்டே ஆக வேண்டும்

Wednesday, October 16, 2013

Indian Medicinal Plants by C.P. Khare

This book has detailed information about various herbs. The best thing about it is that it helps you find the herb easily by giving its ayurvedic, unani and siddha names - the tree main medicinal traditional medicines in India. Since the dosage is given too, it makes the book even more useful.

This book is dedicated to the distinguished scientist Dr. A. P. J. Adbul Kalam who revived the glory of Indian medicinal and aromatic plants in the Rashtrapati Bhawan.

To download the book click here

Monday, October 14, 2013

கடலுக்கடியில் காணப்படும் அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுக நகரமான எயிற்பட்டினத்தின் படிமங்கள்.

 சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்குஅரவிந்த் வால்என்று பெயரிட்டேன்என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.
தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்.
மீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இதுபோன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின்போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.
ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள்மரிக்கனாஎன்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.
புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்என்றார்.
எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில்மதிலொடு பெயரியப் பட்டினம்என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.
மதில் என்னும் சொல்லுக்குஎயில்என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரைசோபட்மாஎன்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோஎன்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.
நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, October 01, 2013

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

‘‘தமிழில் படித்தாலும் சாதிக்க முடியும் என்பதற்கு அடையாளம் தான் நான்’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.


தினத்தந்தி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் இலக்கிய பரிசளிப்பு விழாவில் ‘‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு’’ பெற்ற உலகப்புகழ் தமிழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:–
என்னுடைய ‘‘கையருகே நிலா’’ என்ற நூல் என்னுடைய கன்னி முயற்சி. கிட்டத்தட்ட 50 அல்லது 60 விருதுகள் எனக்கு விண்வெளி துறையில் நான் செய்ததற்காக அளித்தாலும், நேற்று தினத்தந்தியில் முதல் பக்கத்தில் எனக்கு விருது கிடைத்திருப்பது என்பதை எனது அப்பா பார்த்துவிட்டு, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை என்பதை கடந்து தமிழறிஞர் மயில்சாமி அண்ணாதுரை என்பதை பார்த்து முதல் முறையாக என்னை பாராட்டினார்.
இதுவரைக்கும் என்னை மற்றவர்கள் பாராட்டியிருக்கலாம். அப்பா பாராட்டியது தினத்தந்தியில் வெளிவந்த முதல் பக்க செய்தியை பார்த்தப்பின்தான் பாராட்டினார்.
நான் படித்தபோது தினத்தந்தி முதல் மாணவனுக்கு பரிசு தருவார்கள். இந்த பரிசு வாங்க வேண்டும் என்பதற்காக படித்தேன். வாங்க முடியவில்லை. அன்றைக்கு விட்ட பரிசை திரும்ப வாங்க வேண்டும் என்பதற்காக விண்ணப்பித்தேன். வாங்கி உள்ளேன்.
தமிழில் படித்தாலும் சாதிக்க முடியும் என்பதும், தமிழில் படித்தால் உன்னால் நிலவுக்கே போகமுடியும் என்பதையும் இன்றைய மாணவர்களுக்கு, இன்றைய சிறார்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே கடப்பாட்டில் எழுதியது தான் கையருகே நிலா என்ற புத்தகம்.
எனக்கு காலையில் 7.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து டிரைவர் வருவார். அவர் படித்து வைத்திருந்த தினத்தந்தியில், அவருக்கு பிடித்த செய்தியை, நான் என்ன படிக்க வேண்டுமோ அதை மடித்து வைத்திருப்பார். அதை நான் எடுத்து படிப்பேன். அன்னைக்கு விட்ட பரிசு, இன்னைக்கு எப்படி வருகிறது என்று பாருங்கள்.
தமிழ் அடுத்த தலைமுறைக்கு போக வேண்டும். இன்றைய குழந்தைகள் தமிழ் படிக்க வேண்டும். தமிழை உணர வேண்டும். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் இன்றைய பெற்றோர்கள் தனது குழந்தைகள் தமிழில் படித்தால் மேலே வரமுடியும் என்று நம்ப வேண்டும். அதற்காக தான் எனது பணி சந்திரயானை அதையும் தாண்டி செவ்வாய்க்கு போக கூடிய விண்கலத்தை அனுப்பும் திட்டம்.
400 கிலோ மீட்டர் செல்லும் செயற்கைகோளை செய்தோம். அதையும் தாண்டி 36 ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் செயற்கை கோள் செய்தோம். சந்திரயான் 4 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலவை தொட்டது. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் 4 லட்சம் மில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள செவ்வாயை தொடப்போகிறது.
அந்த வகையில் அறிவியல் அடுத்த கட்டத்தை தாண்டுகிறது. தமிழும் போக வேண்டும். அப்படி செல்ல வேண்டுமானால் எடுத்துக்கொண்டு போக வேண்டியது நாம் தான். 400 கிலோ மீட்டர் தூரம் செல்லும் செயற்கைகோள் மற்றவர்கள் செய்தனர். நாமும் செய்ய முடியும் என்று கருதி செய்தோம். ஆனால் அதையும் தாண்டி மற்றவர்கள் செய்ய முடியாததை, நம்மால் செய்ய முடியும் என்பதை சந்திரயான் காண்பித்தது. செவ்வாய்க்கும் போகிறோம்.இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.