உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Wednesday, December 28, 2011

தமிழனின் பிள்ளை

சூடு சொரணை கொஞ்சமுமில்ல சொல்லடா நீயா
தமிழனின் பிள்ளை

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்குத்
தோரணம் ஆனது வாழை - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை

கூப்பிட்டுப் பதவி கொடுத்தப் பகைவனை
கும்பிட்டு வாய் பொத்தி நின்றாய் - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ - நீயும்
சாக்கடை நாய் போல தின்றாய்

தீயவர் தலையைச் சிறுக மறந்தாய் - உன்
தேசத்தைப் பாரடா நெருப்பு - அட
அமிர்தம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழிய நீ அல்லவா பொறுப்பு

என்றென்றும் உன் தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடியா பறக்கும்? - அட
நன்றாக நன்று இருந்து பார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்.

காசி ஆனந்தன்

Sunday, December 25, 2011

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை‏

றிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!

ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?
"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )
 
அண்ணா காஞ்சி சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக நின்றார். ஆனால் தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் வென்றார். அவர் அண்ணாவிடம் வந்து, ‘I am sorry.’ என்றாராம்.
அண்ணா, ‘I am not a lorry to carry your sorry!’ என்றாராம்!

அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டசபையில் நடந்த சூடான விவாத்த்தில், எதிர்கட்சியைச் சேர்ந்தவர், கோபமாக அண்ணாவைப் பார்த்து:
‘Your days are numbered’
என்றார். அதாவது, நீங்கள் சீக்கிரம் ஆட்சியை விட்டு போகும் காலம் எண்ணப்படுகிறது என்றார்.
அண்ணா அதற்கு:
‘But our steps are counted’
என்றார். அதாவது எங்களது சாதனைகள் கவனிக்க்ப்படுகின்றன என்றார்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகம் ஒரு காங்கிர்ஸ் கோட்டை. அங்கு அண்ணா மாணவர் மன்றத்தில் உரையாற்ற்ச்சென்றார்.
காங்கிர்ஸ் மாணவர்கள் அண்ணாவுக்கு ஆங்கிலம் வராது. அவரை அவமானப்படுத்த வேண்டும் என நினைத்து, ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என்றனர்.
‘என்ன தலைப்பில்?’ என்று கேட்டார்.
’தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்றனர்.
அப்போது அண்ணா குழம்பி விடுவார். அல்லது தனக்கு இலகுவான ஒன்றைத் தேர்ந்தெடுப்பார் என நினைத்தனர்.
அண்ணா மேடையை நோக்கினார். பின்னர் கூட்டத்தை நோக்கினார். அப்பொது முன்வரிசையில் இருந்த ஒருவர் தீக்குட்சியக்கொழுத்தி, தன் சிகரெட்டைப் பற்ற வைத்தார்.
இதைக்கவனித்த அண்ணா:
‘Yes, SPARK is my topic today’ என்று தொடங்கி நெருப்பு என்ற தலைப்பில் ஆங்கில உரையாற்றி அமர்ந்தார். காங்கிரஸ் மாணாவர்கள் கரகோஷம் எழுப்பித்தானே ஆகவேண்டும்?
(இந்த் உரை அண்ணமலைப்பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் படிக்க)


இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர். மொழியைச் சிதைத்துத் தான் வேற்றுமொழியில் புலமையடையலாம்  என்பதெல்லாம் வெறும் கற்பனைகள் தான் என்பது அறிஞர் அண்ணாவின் வாழ்வில் நடந்த இச்சம்பவங்கள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தாய்மொழி தமிழைத் தவிர்த்து / சிதைத்து மட்டும் தான் ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவு என்பதை புரிந்து கொள்வார்களா?

Sunday, December 11, 2011

முல்லைபெரியாறு அணையும் அற்பதனமான அரசியலும்


சிவகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் முல்லை ஆறும், சதுரகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் பெரியாறும் ஓர் இடத்தில் கலக்கும் இடத்தில் அணை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டது. அதுதான், முல்லைப் பெரியாறு அணை. இதற்கு முன்னிலை வகித்தவர் ஆங்கிலப் பொறியாளர் ஜான் பென்னி குக். 1886-ல் சென்னை ராஜதானி கவர்னர் ஹாமில்டன் முன்னிலையில் தமிழகம் மற்றும் கேரளமும் இணைந்து 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

இதனால் ஓர் ஆண்டுக்கு ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் 8,000 ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயை தமிழகம் கேரளாவுக்குக் கட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. சென்னை பொறியாளர்கள் ரியாஸ், ஸ்மித் லோகன்பால் இவர்களோடு தலைமைப் பொறியாளர் பென்னி குக் முன்னிலையில் 1886-ம் ஆண்டு அணை கட்டத் தொடங்கி 10-10-1895 அன்று திறப்பு விழா நடந்தது.

இந்த அணை கட்டுவதற்கு ஏகப்பட்ட பொருட் செலவும் உயிர் சேதமும் ஏற்பட்டது. காலரா, பூச்சிக் கடி, யானை மற்றும் புலி போன்ற வன விலங்குகளால் 422 பேர் கொல்லப்பட்டதாக அரசுப் புள்ளி விவரங்கள் கூறுகிறது. அணையைக் கட்டிய கிழக்கிந்திய கம்பெனி போதுமான நிதி இல்லை என்று கைவிட்ட நிலையில், பென்னி குக்,  'நான் பிறந்தது ஒரு முறைதான். அதற்குள் என் லட்சியத்தை அடைவேன்என்று தன்னுடைய நாட்டுக்குச் சென்று மனைவியின் நகைகள், சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுப் பணம் கொண்டுவந்து அணையைக் கட்டி முடித்தார்.  

அதனால்தான் அவரது பெயரை.. லோகன், லோகி, லோக நாயகன், லோகநாயகி, பென்னிகுக் என்று இப்பகுதி மக்கள் சூட்டுகிறார்கள். அவர்கள் உருவில் பென்னி குக் இன்றும் வாழ்கிறார். கடைகள், வீதிகள், மன்றங்களுக்கும் அவர் பெயர் வைத்து நன்றி செலுத்துகிறார்கள். நீர் இருக்கும் வரை அவர் பெயர் இருக்கும்.

சமீப காலம் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. '999 ஆண்டு ஒப்பந்தம் பழமையானது. அதனால் புதிய ஒப்பந்தம் போடவேண்டும். புதிய அணை கட்ட வேண்டும்என்று கேரள அரசு 2006-ம் ஆண்டு சட்டசபையில் கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்று ஒரு மசோதாவை உருவாக்கியது. அதனால், தமிழக அரசு வழக்கமாக கொடுக்கும் 2.40 லட்சம் ரூபாயைப் பல கோடிகளாக உயர்த்தலாம் என்றும், புதிய அணை கட்டினால் மின்சாரம், சுற்றுலா பெருகும் என்றும் யோசித்தது கேரள அரசு.


தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர் பாயும் வழித்தடங்களில் சுமார் 26 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கேரளா மக்களுடையது. இது வரை தமிழகம் முல்லைப் பெரியாறு தண்ணீரைப் பயன்படுத்தியதற்காக 27 கோடியே 8 லட்சம் ரூபாய் கட்டியுள்ளது. இது போக கேரள மின்சாரத்திற்கு உத்தேசமாக சுமார் 116 கோடி செலவழித்துள்ளது. 1961 முதல் 2001 வரை கேரள போலீஸாருக்கு 1:4 என்ற விகிதத்தில் 50 ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் சம்பளத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.


1979-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் அணையில் விரிசல் என்று கூறியது கேரள அரசு. அதனால் அணையைப் பலப்படுத்த தமிழக அரசு சுமார் 26.75 கோடி செலவிட்டது.


இப்போது விரிசல், நில நடுக்க ஆபத்து என்று கேரள மக்கள் இடையே வீண் பீதியைக்கிளப்புவதற்குக் காரணம் இருக்கிறது. அது, கேரளாவில் தற்போது நிகழும் அரசியல் சூழ்நிலைதான். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும், இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட்) 68 இடங்களையும் கைப்பற்றினார்கள். இதனால், காங்கிரஸ் கட்சியின் உம்மண் சாண்டி முதல்வரானார்.


காங்கிரஸ் அமைச்சர் ஜேக்கப் கடந்த அக்டோபரில் இறந்ததால், விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 140 இடங்களைக்கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 71 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் ஆளும் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஒருவர் போக 70 என்று பலம் இருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் தோற்றுவிட்டால், இடது சாரிகள் சம பலம் பெற்றுவிடுவார்கள். அதனால் எப்படியும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் உம்மண் சாண்டி, இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார். இதற்கு எதிர்ப்பு அரசியல் பண்ணவே, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்,  

நடக்கவே முடியாத நிலையிலும் வந்து அணையைப் பார்வை​யிட்டு, 'கேரள மக்களின் உயிருக்​கும் உடைமைக்கும் பாதிப்புஎன்று பொய்ப் பிரசாரம் செய்தார். அடுத்த நாளே, கேரள சட்டசபை பேச்சாளர் கார்த்திகேயன், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் வந்து அணையைப் பார்வையிட்டு, 'அணையில் நீர்க் கசிவு, விரிசல், நிலநடுக்கம்என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் அணை வீக் இல்லை. கேரள அரசியல் கட்சிகள்தான் வீக்.


முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலை தெரியும் என்பதால், கேரள உயர் அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர். கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றம், 'அணை உடையப்போகிறது என்கிறீர்கள், மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியது. அப்போது, 'அணை உடைந்தால் 480 வீடுகள்தான் பாதிக்கும்என்று பதில் தந்தது கேரள அரசு. 'அணை உடைந்தால் ஐந்து மாவட்டங்கள், 45 லட்சம் மக்கள் கொல்லப்படுவார்கள்என்று கூறப்பட்ட கருத்தை கேரள அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நிராகரித்த காரணத்தால்தான், அவரது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர் கேரள அரசியல்வாதிகள்.


முல்லைப் பெரியாறு அணை இரு புறமும் மலைகளால் சூழ்ந்துள்ளது. அதனால் அணை உடைந்தால், உப்புத் துறையில் 420 குடும்பங்களும், சப்பாத்துப் பகுதியில் 580 குடும்பங்களும் மட்டுமே பாதிப்பு அடையும். அந்த இரண்டு கிராமங்களுக்கும்கூட, பாதுகாப்பாக 36 அடி உயரத்தில் கரை கட்டப்பட்டு உள்ளது. இந்த உண்மையை எடுத்துக்கூறிய பொறியாளர்களையும், அங்கு உள்ள அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். முன்பு அணை உடைவது போலவும், வெள்ளத்தால் மக்கள் அடித்துச் செல்லப்படுவதாகவும் குறும் படம் இயக்கினார்கள். இப்போது அதையே டேம் 999 என்ற பெயரில் படம் எடுத்து, கேரள மக்களின் உணர்வுகளைத் தூண்டுகிறார்கள்.


ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 236 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ காய்களுக்கு 86 லிட்டரும் ஒரு கிலோ பழத்துக்கு 112 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. கேரளத்தில் இருந்து ஓர் ஆண்டிற்கு 12 முதல் 15 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் வாங்குகிறது. ஆனால், இங்கே உற்பத்தி செய்த 3.26 லட்சம் டன் காய்கள், பழங்களை ஆண்டுதோறும் கேரளாவுக்கு அனுப்புகிறது. 2,000 மெட்ரிக் டன் பால் அனுப்புகிறது. இது வாங்கும் தண்ணீரைவிட அதிகம். 

ஒட்டுமொத்தமாகச் சொல்வது என்றால் 48% உணவுப்பொருளை கேரளாவுக்கு அனுப்புகிறது தமிழகம். ஆனாலும் தமிழன் வஞ்சிக்கப்படுவதுதான் வேதனை''

Friday, December 09, 2011

மின்சார மீன்கள்

நாம் பார்க்க இருப்பது மிக உயர்ந்த மின் ஆற்றலை தன்னகத்தே கொண்டு விளங்கும் எலக்டிரிக் ஈல் (Electric Eel) என்று அழைக்கப்பபடும் மின்சார மீனைப் பற்றியதாகும்.
 
தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய இந்த வியப்பளிக்கும் மீன், தன் எதிரியின் உடலில் பட்ட மாத்திரத்தில் உயிரிழக்கச் செய்யும் அபரிதமான மின் ஆற்றலின் உற்பத்திக் கேந்திரமாக விளங்கிவருகின்றது.

N
நம் நாட்டிலே மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின் சாதனங்களின் அருகில், அபாயம் 440V  மின்சாரம் என்று எழுதப்பட்டு மண்டை ஓட்டிற்கு கீழே இரண்டு  எலம்புகளினால் பெருக்கல் குறி அமைப்பில் வரையப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டிருப்பதைக் கண்டிருப்போம். 440V மின்சாரம் என்பதே மனிதார்களைப் பொருத்த வரை அபாயம் என்ற நிலை இருக்கும் போது 650V மின்சாரம் எந்த அளவிற்கு அபாயகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
எலக்டிரிக் ஈல் தன் உடலில் கொண்டிருக்கும் மின் அழுத்தம் 650V மின்சாரமாகும். இத்தகைய அபரிதமான மின் ஆற்றல்தான், இவை இறைவன் புறத்திலிருந்து அடையப் பெற்ற விதிவிலக்கான அம்சமாகும். இன்னும் சில வகை மீன்களுக்கும் சிறிய அளவிலும் குறிப்பிடக் தக்க அளவிலும் மின் ஆற்றல் இருப்பினும் இந்த எலக்டிரிக் ஈல் அவை அனைத்தையும் காட்டிலும் மிக அதிக அளவிற்கு மின் ஆற்றல் பெற்று விளங்குகிறது.
 
மேசான் ஆற்றின் கிளை நதியாகிய ஒரினோகோ ஆறுதான் எலக்டிரிக் ஈல் மீனுடைய பிறப்பிடமாகும். 2.75 மீட்டர் நீளமும், சுமார் 22 கிலோ எடையுடன் கூடிய இந்த மீன் உருவ அமைப்பில் பாம்பின் அமைப்பில் காணப்படுகின்றது. சாம்பல் நிறத்துடனும் மிகக் குறைந்த அளவிளான செதில் அமைப்புடனும் உருளையான வடிவத்திலும் அமைந்துள்ளது. உள் உறுப்பு அனைத்தும் இவற்றின் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன.
 
இவற்றிற்கு சிறிய அளவிலே செவுள் அமையப் பெற்றிருப்பினும் கூட இவை சுவாசித்ததன் பின்னர் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றவே இதைப் பயன்படுத்துகின்றன. இவை வாழக்கூடிய ஆறுகளின் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதனால் இவை அடிக்கடி தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து வாயின் மூலம் சுவாசித்துச் செல்கின்றன. மேலும் இவற்றின் வாயின் உட்புறத்தில் அதிக அளவிற்கு இரத்த நாளங்கள் அமையப் பெற்று இருப்பனால் அதிகமான ஆக்சிஜனை கிரகித்துக் கொள்ள ஏதுவாயிருக்கின்றது. இவை அதிகமான நேரங்கள் அசைவின்றி மிகவும் சோம்பல் வாய்ந்த நிலையிலேயே கழிக்கின்றன.
 
இவற்றின் திறனைப் பற்றி பண்டைய கால மக்களும் அறிந்து வைத்திருந்தனர் என்பதனை வறலாறுகளில் அறிய முடிகின்றது. பண்டைய ரோமானியப் பேரரசர்கள் எலக்டிரிக் ஈலைக் கொண்டு தங்கள் எதிரியை கொன்று அழித்தனர். இவை உயிரைப் போக்கி விடக்கூடிய ஏதோ ஒரு ஆற்றல் பெற்று விளங்குவதை அறிந்து வைத்திருந்தனரே தவிர இவற்றின் அபரிதமான மின் ஆற்றலைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை. பண்டைய ரோமானிய மன்னர்கள் இவற்றை நன்கு அலங்கரித்து குளங்களில் வளர்த்து தங்களின் அரசியல் எதிரிகள் மற்றும் தங்களுக்கு அடிபணியாத அடிமைகளை குளத்தில் தள்ளி இவற்றின் மூலம் சாகடித்துள்ளதை வறலாறுகளில் காண முடிகின்றது.
 
இவற்றின் மின் அதிர்வு பெரிய குதிரையையே 6 மீட்டர் தொலைவிற்குத் தூக்கியெறியும் ஆற்றல் உள்ளதாகும். இந்த மீனைப் பொருத்தவரை தனது உணவிற்காக இவைகள் தனது எதிரியின் மீது மோதினாலே போதுமானதாகும். அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு மின்சாரத்தைப் பாய்ச்சியும் தன் இரையைக் கொல்லும் ஆற்றலைப் பெற்று விளங்குகின்றது. எலக்ட்ரிக் ஈல் அவற்றின் மீது பட்ட உடன் மின் தாக்குதலால் உடனே செயலிழந்து விடுகின்றன அல்லது பொதுவாக இறந்துவிடுகின்றன. பட்ட மாத்திரத்தில் மனிதர்களின் உயிரைக் குடிக்கும் ஆற்றல் இந்த உயிரினத்திற்கு மாத்திரம்தான் இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

இவற்றின் உணவு பெரும்பாலும் இதரவகை மீன்கள் மற்றும் தவளைகளாகும். இருப்பினும் கூட இவை காடுகளின் பழங்கள் மற்றும் விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றை நன்றாக உண்ணக் கூடியவை. பருவகாலத்தில் பெய்யும் மழையினால் அமேசான் ஆற்றில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளப் பெருக்கினால் ஆற்று நீர்மட்டம் உயர்ந்து அடர்ந்த வனப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதனால் இவை காடுகளினுள் பயணித்து பழங்கள் மற்றும் விதைகளை நன்கு உண்ணுகின்றன. இந்த பருவத்தில்தான் மரங்களிலிருந்து அதிகப் படியாக பழங்கள் விழுகின்றன.
 
 
எலக்டிரிக் ஈலின் உடல் அமைப்பும் அதன் மின் உறுப்புகளைப் பற்றிய ஓர் விளக்கப் படம்.

எலக்டிரிக் ஈலின் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் அவற்றின் உடல் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியிலேயே அமைந்துள்ளன. மிஞ்சிய பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உறுப்புகள் அமைந்துள்ளன. இவற்றின் மின்சார அமைப்பு ஒரு பேட்டரியின் அமைப்பை முழுதும் ஒத்திருக்கின்றன. பேட்டரியின் நேர் எதிர் துருவங்களைப் போன்றே இவற்றிற்கும் இருதுருவங்கள் அமையப் பெற்றுள்ளன. மின்சாரம் பாய்ந்து செல்ல இருதுருவங்கள் இல்லையெனில் மின் சுற்று நிறைவு பெறாத நிலையில் மின்ணோட்டம் முழுமைப் பெறுவதில்லை. இவற்றின் தலைப்பகுதி நேர் துருவம்(பாஸிடிவாகவும்) அதன் வால் பகுதி எதிர் துருவம்(நெகடிவாகவும்) அமைந்து மின்சாரம் பாய்ந்து செல்ல வகைச் செய்கின்றன. இவை இரண்டு வித்தியாசமான வெவ்வேறான மின்சார உற்பத்தி உறுப்புகளைப் பெற்றுள்ளன. ஒன்று சாக்ஸ் (
Sacks) என்றழைக்கப்படும் உறுப்பு. சாக்ஸ் என்றழைக்கப்படும் உறுப்பின் மூலம் மிகக் குறைந்த அளவாக 5 முதல் 10 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகின்றது. இந்த குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் அவற்றின் சுற்றுப் புறங்களுக்கு அனுப்பி மற்ற ஈல்களுடன் தொடர்பு கொள்ளவும், அவை இடம் பெயர்ந்து செல்லவும் பயன்படுத்துகின்றன. மேலும் இதனைக்கொண்டு இரையின் இருப்பிடத்தைப்பற்றிய துப்பு அறியவும் இவைகளினால் பயன்படுத்தப்படுகின்றது.

அடுத்த உறுப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று முக்கிய சேமிப்பு மின்கலம்
(main batary) ஆகும். அடுத்து வேட்டை உறுப்பு (hunter organ) ஆகும். இரண்டும் மின்சாரத்தைச் சேமித்து வைக்கவும் அதை தேவையின் போது வெளிப்படுத்தவும் உதவுகின்றன. 1938ம் ஆண்டு நியூயார்க் உயிரியல் பூங்காவின் பொருப்பாளர் டபிள்யூ. கோட் (W.Coate) அவர்களினாலும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியலார் ஆர்.டி.காக்ஸ் (R.T.Cox) இருவரினாலும் இணைந்து செய்யப்பட்ட ஒரு சுவாரசிய ஆராய்சியில் வித்தியாசமான சில அம்சங்களைக் கண்டறிந்தனர். இயற்கையில் எலக்டிரிகல் ஈல் வாழக்கூடிய சூழ்நிலையிலேயே ஒரு நெகடிவ் மின் கம்பியுடன் இணைந்த 2 வோல்ட் நியான் பல்புடன் இணைத்தபோது அந்த பல்பு எரியத்துவங்கியது. மேலும் வெளிப்புறத்திலிருந்து மின்சாரத்தை அதில் இணைத்தபோது அவை சீண்டப்பட்டு தனது மின்சாரத்தை மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படும் அமைப்பிலே ஒரு ஸ்பீக்கரைப் போன்று சத்தத்துடன் வெளிப்படலாயிற்று. அந்த சத்தம் நன்கு கேட்டக் கூடிய வகையிலே அமைந்திருந்ததைக் கண்டார்கள். அப்போது அதனுடன் இணைக்கப்பட்ட வோல்ட் மீட்டர் 500 வோல்ட் மின்சாரத்தை வெளியிட்டதை அறிந்தார்கள்.

இறந்த 9 மணி நேரத்திற்குப் பிறகும் மின் அதிர்வைத் தரும் பயங்கரம்.
இவற்றின் மின் திறன் இவற்றின் வயது மற்றும் இவற்றின் அளவிற்கு ஏற்றார்போல் அளவில் வேறுபடுகின்றன. இவற்றின் வயது ஏற ஏற இவற்றின் மின் ஆற்றல் திறனும் அதிகறித்துச் செல்லுகின்றது. இவற்றின் உடலில் மின்சார உற்பத்தியின் திசுக்கள் வித்தியாசமான அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவை எலக்டிரோசைட் (electro cytes) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் வட்ட வடிவில் அமைந்துள்ளன. ஏறக்குறைய இவற்றின் எண்ணிக்கை இரண்டு லட்சம் வரை அமையப் பெற்றுள்ளன. இவற்றின் ஒரு எலக்டிரோசைட் 0.15 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன. இவைகளின் ஒருங்கிணைந்த முழுத் தொகுப்பே 650 வோல்ட் மின்சாரமாகும். இவை மீனின் அளவிற்கு ஏற்றார்போல் வித்தியாசப்படுகின்றன.

ஏலக்டிரிக் ஈல்கள் எல்லா நேரத்திலும் முழு மின் ஆற்றலையும் பிரயோகம் செய்வதில்லை. இவை தன் ஆற்றலைப் பயன்படுத்தாத சமயங்களில் ஒன்வொன்றின் மின்திறனும் 0.8 வோல்டான நிலையில் சம நிலையாயிருக்கும். இந்த எலக்ட்ரோசைடின் வெளிப்புறம் (+) நேர்த் துருவமாகவும் அதன் உட்புறம்  (-) எதிர் துருவமாகவும் அமையப் பெற்று உபயோகத்தின் போது இவ்விரு துருவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உயர் மின் அழுத்தம் செலுத்தக் கூடிய முறையிலே அமையப் பெற்றுள்ளன. இவை உயிருடன் இருக்கும் போது மட்டுமல்லாது இறந்த 9 மணி நேரத்திற்கு பிறகும் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தினால் மின் அதிர்வை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.
 
 
எலக்டிரோசைட் ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்தொகுப்பை ஏற்படுத்தக் கூடிய விளக்கப் படம்.

எலக்டிரோசைட் உபயோகம் இல்லாத சமயங்களில் அவற்றின் அமைப்பு கீழ் கண்ட நிலையில் அமையப் பெற்றிருக்கும்.
 

மின்சாரத்தை பிரயோகம் செய்யும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்சாரத் தொகுப்பை ஏற்படுத்தி உயர்ந்த மின் அழுத்தத்தை ஏற்படுத்தும் போது அவற்றின் நிலை.

மிக அதிசய பயணம்
எலக்டிரிக் ஈல் ஆற்று நன்னீரில் வாழக்கூடியதாக இருப்பினும் கூட இவைகள் குஞ்சு பொறிக்க கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன. இவை ஏன் தங்கள் வாழும் இடத்தை விடுத்து கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன என்பதற்கு இதுவரை சரியான காரணம் அறிவியல் அறிஞர்களினால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை சரகாஸ்ஸோ(
saragasso) கடலிற்கு பயணித்து கடலின் மிக ஆழத்தில் முட்டையிட்டு தங்கள் வாழுமிடத்திற்கு திரும்பி வந்து வாழ்க்கையைத் தொடருகின்றன. அதன் பிறகு முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் வளைகுடா நீரோட்டத்தினோடு (gulf stream) தங்கள் பயணத்தை தொடருகின்றன. இந்த சிறிய லார்வாக்கள் ஒரு வருடக் காலத்தில் பயணித்து அல்லது நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டு வட அமெரிக்காவின் கடற்கரையையும், முன்று ஆண்டுகளில் ஐரோப்பாவையும் அடைகின்றன. பின்னர் இவை வளைகுடா நீரோட்டத்தினால் திரும்பி தங்கள் பெற்றோர் வாழும் தென் அமெரிக்காவின் ஆற்று முகத்துவாரங்களை அடையும் போது இவை உருவத்தில் எலக்டிரிக் ஈலின் உருவத்தை அடைகின்றன. பின்னர் இவை ஆறுகளுக்குத் திரும்பி தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. மீண்டும் அவை பருவத்தை அடைந்து முட்டையிடும் காலம் வரை அங்கே கழித்துவிட்டு முட்டையிட கடலின் உப்பு நீரை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. இதுவே இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியாகும்.

Electric Eel

The electric eel (Electrophorus electricus), is an electric fish, and the only species of the genus Electrophorus. It is capable of generating powerful electric shocks, of up to six hundred volts, which it uses for both hunting and self-defense. It is an apex predator in its South American range.

Despite their serpentine appearance, electric eels are not actually eels. Their scientific classification is closer to carp and catfish.

These famous freshwater predators get their name from the enormous electrical charge they can generate to stun prey and dissuade predators. Their bodies contain electric organs with about 6,000 specialized cells called electrocytes that store power like tiny batteries. When threatened or attacking prey, these cells will discharge simultaneously, emitting a burst of at least 600 volts, five times the power of a standard U.S. wall socket.

They live in the murky streams and ponds of the Amazon and Orinoco basins of South America, feeding mainly on fish, but also amphibians and even birds and small mammals. As air-breathers, they must come to the surface frequently. They also have poor eyesight, but can emit a low-level charge, less than 10 volts, which they use like radar to navigate and locate prey.

Electric eels can reach huge proportions, exceeding 8 feet (2.5 meters) in length and 44 pounds (20 kilograms) in weight. They have long, cylindrical bodies and flattened heads and are generally dark green or grayish on top with yellowish coloring underneath.

Human deaths from electric eels are extremely rare. However, multiple shocks can cause respiratory or heart failure, and people have been known to drown in shallow water after a stunning jolt.
Electric eels are extremely common throughout their range.

Scientific classification
Kingdom: Animalia
Phylum: Chordata
Superclass: Osteichthyes
Class: Actinopterygii
Order: Gymnotiformes
Family: Gymnotidae
Genus: Electrophorus
Gill, 1864
Species: E. electricus
Binomial name
Electrophorus electricus
(Linnaeus, 1766)

Sunday, November 20, 2011

கூடங்குளம் அணு உலை வெளிக்கொண்டுவரும் உண்மைகள்

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் நாட்டின் மின் சக்திக் கொள்கையையே உலுக்கிவிட்டது போல் வெடித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி எப்படியாவது கூடங்குளம் அணு உலையை செயல்படச் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு புறம், தமிழக முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதி இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு நேரும் மனித உரிமை மீறல்களை தேசியப் பிரச்சனையாகக் கருத வேண்டுகோள் விடுக்கிறார். இதற்கிடையில் அறிவிக்கப்படாத, அதிக நேர மின்வெட்டினால் தமிழக மக்களும், சிறு தொழில் நிறுவனங்களும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இச் சூழலில், மக்களுக்கு தேவையான மின் சக்தி, அதில் அணுசக்தியின் பங்கு, அரசின் மின் கொள்கை, மாநில-மத்திய அரசுகளின் அதிகாரப் பகிர்வுகள், தென்மாவட்ட மக்களின் குறிப்பாக கடலோர மக்களின் எல்லைப்பகுதி இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல், உரிமை மீறல் என பல பரிமாணங்கள் வெளிப்படுகின்றன.

முதலில் மின் சக்தி, அதிலும் அணுசக்திக் கொள்கையையும், குறிப்பாக கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் நடக்கும் விவரங்களை அறிவோம். கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தவரை அதன் ஒப்பந்தம் போடப்பட்ட நவம்பர் 1988ல்( தமிழகத்தில் ஜனவரி 1988- ஜனவரி 1989 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி) இருந்தே அணுசக்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1998ல் ரசியா-இந்தியாவிடையே மீண்டும் பேச்சுவார்த்தை  தொடங்கின. அப்போது மக்களிடம் எந்த கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. தமிழக அரசின் கருத்தும் கேட்கப்பட்டதாக தெரியவில்லை. 2001ல் கட்டுமான வேலைகளும், தூத்துக்குடி துறைமுகம் வழியாக எரிபொருள் இறக்குமதியும் நடைபெற்றது. 2004ல் கூடங்குளத்திலேயே துறைமுகம் அமைக்கப்பட்டது. அங்கு முழுவதும் கட்டுமான வேலைகள் மட்டுமே நடைபெற்றதால் மக்களுக்கு அதன் பாதிப்புகள் எதுவும் அறிந்திருக்கவில்லை. அணுசக்தியினால் ஏற்படக் கூடிய அழிவுகளை அறிந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், சில தன்னார்வ அமைப்புகளுமே அதற்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தன. 2006ல் மேலும் 4 அணு உலைக் கூடங்களை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலியிலும், சென்னையிலும் நடத்தப்பட்டது. இதில் பரவலாக கலந்து கொண்ட தென் மாவட்ட மக்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கிடையே ஜனவரி 2007ல் ரசிய அதிபர் புதினுடன், இந்தியப் பிரதமர் மேலும் 6000 மெகா வாட் மின் உற்பத்திக்கான 4 உலைகள் அமைக்க ஒப்பந்தமிட்டார். ஒருபுறம் ரசியாவுடன் கையெழுத்திட்டுக் கொண்டு, மறுபுறம் அமெரிக்காவிடமும் அணுசக்தி தயாரிப்பில் வெளிப்படையான தன்மையைக் கையாள்வதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். 2010ல் அணுசக்தியால் ஏற்படும் அழிவிற்கான இழப்பீடு வழங்குவதற்கான சட்டத்தையும் கொண்டுவந்தார் (இந்த சட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளின் ஒப்புதல் இல்லை). இதன்மூலம், சர்வதேச அளவில் உள்ள அணுசக்தி தயாரிப்பிற்கான அமெரிக்காவின் நெருக்கடியை சமாளிக்கும் வேலையையும், உள்ளூரில் எழும் பிரச்சனைகளை சரிகட்டுவதற்கான தயாரிப்பையும் ஒருசேர நிகழ்த்தியுள்ளார்.

கூடங்குளத்தில் அணுசக்தி தயாரிப்பிற்கான மூலப்பொருளான யுரேனியம் ரசிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ரசியாவில் 5,00,000 டன் யுரேனியக் கனிமம் இருப்பில் உள்ளது. ஆண்டொன்றுக்கு, 11,000 முதல் 12,000 டன் வரை யுரேனியம் வெட்டி எடுக்கப்படுகிறது. 2006ல் மட்டும் ஒரு ரசியக் கம்பெனி, யுரேனிய சுரங்கம் மூலம் 8.1 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்துள்ளது (இந்திய ரூபாயில் 740 கோடி). இந்த யுரேனியம் என்ற தாதுப் பொருள் மிக அபாயகரமான கதிர்வீச்சுத் தன்மை கொண்டதாகும். அதனை அணு உலையில் இட்டு சிதைக்கும்போது வெளிப்படும் காமாக் கதிர்களைக் கொண்டு அதிக அழுத்த நிலையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இப்படி யுரேனிய அணு பிளவுபடும் போது அதிலிருந்து சில கனிமப் பொருள்கள் வெளிப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை, சீசியம், ஸ்டராண்டியம், புளூட்டோனியம் ஆகிய தாதுப் பொருள்கள். இவை புவியின் எந்த உயிர்ச்சூழல் தன்மையையும் சேராதவை. இதில், சீசியம் என்ற தனிமம், தாவரங்களுக்குத் தேவையான பொட்டாசியம் போன்று தன்னைக் காட்டிக் கொண்டு உணவுச் சங்கிலியில் புகுந்து கொண்டுவிடும். அது தாவரங்களில் உள்ள செல் மூலக்கூறுகளின் தன்மையையே முழுவதுமாக மாற்றிவிடக் கூடியது. அதே போல, ஸ்ட்ராண்டியம், புளூட்டோனிய தனிமங்கள், மனிதர்களுக்குத் தேவையான கால்சியம் போன்று தன்னைப் போலியாகக் காட்டிக் கொண்டு நமது பற்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் புகுந்துவிடும். இவை, எலும்புறுக்கி நோய், நுரையீரல் புற்று நோய், கர்ப்பக் கோளாறுகளை ஏற்படுத்தி நீண்ட கால தாக்கத்தினை ஏற்படுத்திவிடும். இவ்வாறாக பாதிப்பினை ஏற்படுத்தவல்ல இந்த தாதுக்கள், அணு உலையில் பயன்படுத்தப்படும் எந்த உலோகத்திலும் எளிதாக ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவை. அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் இந்த உலோகக் கழிவுகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கதிர்வீச்சினை ஏற்படுத்தவல்லவை. ரசியாவின் செர்னோபிலில் 1986-ல் நடந்த அணு உலை விபத்தின் கதிர்வீச்சு இன்றும் மிகத் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது, ஒவ்வொரு அணு மூலக்கூறுகளும் 1 நொடிக்கு 600 பிளவுகளை ஏற்படுத்தி நச்சுத் தன்மை வாய்ந்த காமாக் கதிர்களை உமிழ்ந்துவருகிறது. 2016ல் தான் இது 400 ஆகக் குறையுமாம். 2046ல் 200 என குறைந்து, கொண்சம் கொண்சமாகத் தான் தன் தீவிரத்தைக் குறைக்குமாம். இப்படியாக பல ஆண்டுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது தான் அணு உலை ஆபத்து என்பது. முக்கியமாக, எதிர்கால சந்ததி முடமாகப் பிறப்பதற்கும், தற்கால தலைமுறையை, புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாக்குவதே இதன் பலன். 8கிலோ அளவிலான புளூட்டோனியத்தைக் கொண்டு ஒரு அணு குண்டு தயாரிக்கமுடியும். ஒரு அணு உலை 30 ஆண்டுகளுக்கு இயங்கினால், அதிலிருந்து வெளிப்படும் புளூட்டோனியத்தைக் கொண்டு 1200 அணு குண்டுகளைத் தயாரிக்கலாம்.

இந்த நிலையில் கூடங்குளம் கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்தப் போகிறார்கள்? பூமிக்கு அடியில் பல நூறு அடி ஆழம் தோண்டி சிமெண்ட் தொட்டி அமைத்து போடப் போவதாகவும் அல்லது கடலுக்கு அடியில் புதைக்கப் போவதாக சொல்கிறார்கள். இயற்கை சீற்றம் மிக்க குறுகலான வளை குடாக்களைக் கொண்டது தென் தமிழக கடற்கரையோரம். இந்த நிலையில் கழிவுகள் எங்கு புதைக்கப்பட்டாலும், கடல் சீற்றத்தில் அடித்துக் கொண்டுவரும். இப்பிரச்சனை குறித்து கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தால் சரியான சுற்றுச் சூழல் தாக்க ஆய்வும் நிகழ்த்தப்படவில்லை. ஆனால், அணு உலையை இயக்குவதற்கு மட்டும் தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.

இத்தனை பாதிப்புள்ள அணு உலை அமைக்கப்படும் இடம் மனிதர்கள் வாழாத ஏதோ வனாந்திரமோ, பாலைவனமோ அல்ல. இந்தியாவின் தென் கோடி முனையில் சர்வதேச அளவில் உயிர்சூழல் சிக்கலான பகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடாப் பகுதியில்தான். சர்வதேச அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவந்துள்ள விதிமுறைகளில் எந்த ஒரு அணு உலைக்கு அருகிலும் 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் சுற்றுலாத் தளம் இருக்க கூடாது. 30 கிலோ மீட்டருக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நகரங்கள் இருக்க கூடாது. ஆனால், கூடங்குளத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிற்குள் தான் உலகப் புகழ் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரி உள்ளது. 28 கிலோ மீட்டருக்குள் 2 லட்சம் மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் உள்ளது. ஏன் கூடங்குளம் அணு உலையைச் சுற்றியே 3 கிலோ மீட்டருக்குள் 30000  மீனவ, விவசாய, பனைத் தொழில் செய்து வாழும் மக்களும் உள்ளனர். அணு உலைக்கு சுற்றுச் சுவருக்கு அருகிலேயே 450 குடும்பங்களுக்கு சுனாமி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அணு உலையை ஒட்டி மீன்கள் குஞ்சு பொறிக்கும் செங்கனேரி ஓடை அரை கிலோமீட்டருக்கு ஓடி கடலில் கலக்கிறது.

இப்போது பிரதமர் எப்படியாவது அணு உலையின் செயல்பாட்டை துவக்கிவிட முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இதற்கிடையே கூடங்குளத்தில் என்ன நடந்தது அதைச் சற்று பார்ப்போமா?

2006ல் மக்கள் மத்தியில் எழுப்பப்பட்ட எதிர்ப்பினை, வெறும் சந்தேகங்கள், கேள்விகள் என ஒதுக்கி வைத்துவிட்டு 2007ல் மீண்டும் 4 அணு உலைகளுக்கு கையெழுத்திட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் தொடர்ந்து கூடங்குளத்தில் அரசு எடுக்கும் முடிவுகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த சில மக்கள் பிரதிநிதிகளும், உள்ளூர் பிரமுகர்களும் கூட மெதுவாக அணு உலை விசயத்தில் மத்திய அரசின் தன்னிச்சையான போக்கினைக் கண்டு அதிர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். முக்கியமாக, 2004ல் நடந்த சுனாமியும், அதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கடலோரம் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வும் மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

இறுதியாக 2011 மார்ச்சில் ஜப்பானில் நடைபெற்ற புகுசிமா அணு உலை வெடிப்பு, அணு உலை ஆபத்தையும், கடலோரத்தில் உள்ள நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் அது கொண்டு வந்த அழிவினையும் கண்ட பின்பு மக்களின் எதிர்ப்பு கூடங்குளத்தில் அதிகரித்துள்ளது. 2011 ஜூலையில், கூடன் குளம் அணு உலையில் ஹாட் ரன் என்ப்படும் போலி எரிபொருளைக் கொண்டு ஒத்திகை ஓட்டம் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் போது வெளியான அதீத சத்தமும், அதிர்வுகளும், அணு உலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை தூங்கவிடாமல், இரவு முழுவதும் அச்சுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேரழிவு மேலாண்மை பயிற்சியில், கிராம மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வராமல், உள்ளேயே இருக்கும் படி கூறியது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதன்விளைவாகவே தொடர் உண்ணாவிரதமும், சமரசம் செய்து கொள்ளாமல் அணு உலையை மூடக் கோரும் போராட்டங்களும் நடக்கின்றன.

தற்பொழுது, கூடங்குளம் அணு உலை செயல்படவில்லையென்றால் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்காது. இதனால் தொழில்வளர்ச்சி முடங்கிவிடும். அணு உலை மிக பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளது. விபத்து நடைபெற வாய்ப்பே இல்லை. அப்படியே நிகழ்ந்தாலும், மிகச் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், பேரழிவு ஆபத்திலிருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றது என்றெல்லாம், பிரதமரும், அணு சக்தி கழகமும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றனர். இதனோடு கூட, சமீபத்திய தொடர் மின் வெட்டு, மின் பற்றாக்குறை என்ற பிரச்சனையை மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டு, தமிழகமே மின் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது என்ற சூழலை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், 2010-2011 க்கான, மாநில அரசின் மின் சக்திக் கொள்கை விளக்க அறிக்கையைப் படிக்கும் போது, நமக்கு வேறு பல மாறுபட்ட தகவல்கள் கிடைக்கின்றன. அவை;

ஃ    தமிழகத்தின் மின் தேவை அதிக பட்சம் 10865 மெகாவாட் (19.07.2011 அன்று பதிவானது)

ஃ    காற்றாலைகளின் மூலம் மட்டும் 19355 மெகாவாட் திறன் கொண்ட மின்சார உற்பத்தி நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இன்றைய நிலவரப்படி, 6007 மெகாவாட் காற்றாலைகளின் மூலம் பெறப்படுகிறது.

ஃ    610 மெகா வாட் மின்சாரம், சர்க்கரை ஆலைகளில் உள்ள திட உயிர்கழிவுகள் மூலம் பெறப்படுகிறது

ஃ    139 மெகாவாட் பிற உயிர்க் கழிவுகளில் இருந்து பெறப்படுகிறது

ஃ    5 மெகாவாட் மின்சார சூரிய சக்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

ஃ    மின்சாரப் பயன்பாட்டில், 27.5% மின்சக்தி வீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது (மொத்த நுகர்வில் இது 66.56%)

ஃ    34.92% மின் சக்தி தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது (2.41% நுகர்வோர் தொழிற்சாலை நடத்துபவர்கள்)

ஃ    வர்த்தகத்திற்காக 10.43% (12.62% நுகர்வோர்)

ஃ    விவசாயத்திற்காக 20.93% (8.83% நுகர்வோர் விவசாயிகளாக உள்ளனர்)

ஃ    பிற தேவைகளுக்காக 6.67%(9.57% நுகர்வோர்)

ஃ    இதில்,  45.35% மின்சாரம், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களால் மட்டுமே நுகரப்படுகிறது. (மொத்த நுகர்வில் இவர்களின் பங்கு14.62%)

ஃ    ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிப்பு 1% ஆக உள்ளது.

மேற்சொன்ன புள்ளிவிவரங்களின்படி, வீட்டு உபயோகத்திற்கும், விவசாயத்திற்கும் சேர்த்து மின் தேவை என்பது சுமார் 5000 மெகாவாட் அளவிற்கு இருக்கும். தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களுக்கான தேவையும் 5000 மெகாவாட் அளவிற்கு இருக்கிறது.

மேலும், புள்ளி விவரங்களை அலசிப்பார்க்கும் போது, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான, காற்றாலை, சூரிய சக்தி, உயிர்க்கழிவுகள், கடல் பாசிகள் ஆகியவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களைத் துரிதப்படுத்தினாலே போதும்.  மக்களின் அடிப்படைத் தேவைகளான வீட்டு உபயோகம், விவசாயம், சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது புலனாகிறது. மொத்த மின் உற்பத்தியில் 50% நுகரும் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகளும் அனல் மின் நிலையங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளபடி தொழில் வளர்ச்சி அதிகரிக்க மின்சாரம் தேவை என்றால் அது எந்தவிதமான தொழில்வளர்ச்சி என்று கேட்க வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் திட்டம், 2050க்குள் மின்சாரத் தேவையில் 25% ஐ அணு உலைகளில் இருந்து பெறலாம் என்பதே. தற்போது 3% மின் சக்தி மட்டுமே அணு உலைகளில் இருந்து பெறப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் நிலையை இந்த புள்ளிவிவரத்துடன் ஒப்பிட்டால், 2050க்குள் 40% மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது
(மின் தேவை அதிகரிப்பு ஆண்டிற்கு 1% ஆக உள்ளது). அப்படியானால், மத்திய அரசின் 25% இலக்கு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை 10% ஆக மட்டுமே இருக்கும்.

மொத்த மின் சக்தித் தேவையில் 10% அணு மின்சாரத்திற்காக தமிழ்நாடு தனது இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதாரத்தையும் தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்போகிறதா?

தற்போது தமிழகம் அணு உலை மின்சக்தியை நம்பி இல்லை. இந்தியாவிலேயே அதிகம் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தமிழகம் தான்(36%). அதேபோல தமிழகத்தின் மின் விநியோகத்தில் 40% மின் சக்தி, காற்றாலைகள், உயிர்கழிவுகள், சூரிய சக்தியிலிருந்து தான் கிடைக்கின்றன.

தமிழகத்தில் வருடத்திற்கு 300 நாட்களும் சூரிய ஒளி வீச்சு மிகுந்த நாட்கள். எனவே, எதிர்காலத்திலும், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கடல் பாசிகள் மூலம் மின்வாயுத்  தயாரிப்பது போல, தமிழகத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளவாய்ப்பு உள்ளது.
1 மெகாவாட் மின்சாரத்தினால் 1000 வீடுகளுக்கு மின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும். ஒவ்வொரு கிராமத்திலுமே இயற்கை மூலாதாரங்களைக் கொண்ட மின்சாரத் தயாரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது.

அழிவினைத் தரும் அணு சக்தி வேண்டவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களும், அரசும் உறுதியாக இருக்கும் போது, மத்திய அரசு பணிந்து தான் ஆக வேண்டும்.

Sunday, August 21, 2011

Vishalini


Do anyone aware of the 10 years old girl from a small district called Palayankottai, Tamilnadu, who has been awarded as the girl with highest IQ level in the world? Vishalini is the girl from the said mentioned town from Tamilnadu, who has been tested for IQ level and found that her IQ level is 225 at the age of 10 years. IQ refers to intelligent quotient of an individual, where the intelligence has been assessed by different tests. People below the IQ level of 90 are found to have poor intelligence and with IQ level of 90 to 100 are considered average people. Popular personalities and celebrities with enhanced IQ level include the world renowned pop singer Madonna with IQ level of 140 and the Father of Microsoft, Bill Gates with IQ level of 160. Mr. King Ung Yung from South Korea holds the record of have the IQ level of 200. This young girl Vishali has broken the earlier records and rewarded with the highest IQ level. Her father is an electrician and her mother is a home maker. She belongs to a simple family yet found to be quite brilliant with exceptional memory power. She is able to read a book consisting 100 pages in less than 2 hours and is able to answer question asked from any content of the book. The sweet pity is she could almost able to complete her entire school books in less than a couple of months and feels bored for the rest of the year. Jokes Apart. To cope up with her super speed brain her mother is feeding her with exclusive books of engineering students, MBAs, etc. She has recently cleared the MCP examination conducted by the Microsoft with 87% of marks. Further, several other entrance tests conducted for MBA and MCA graduates like CCNA, CAT, etc are undertaken by the young chap Vishali and she has cleared these exams with not less than 95% of marks. She has written numerous national and international examinations and is capable enough to get enrolled in a superior designation in a reputed organisation. Unfortunately, she needs to complete her 8th Standard to enrol into engineering. Irrespective of all these facts, the pride of India has not received any proper recognition. Further, the bitter truth is, the fact is not known to major population. Before a year, a 12 years old boy from Pakistan was rewarded as Pride of Pakistan for passing in 12 difficult examination conducted in their country. Vishali is just 10 years old with greatest IQ level and have passed a number of examinations. Her achievements are not noticed and no one is there is to praise her. However, this poor girl seems not to bother about these aspects and her dream is to become a great scientist. This is one of the serious issues to be considered and recognized by the Government of India to make our country flourish some good aspects. Will she become the Pride of India and receive enough recognition??? Keeping the fingers crossed.....


In  Tamil    weblink  from a leading Tamilnewspaper below.
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=6320&ncat=18

விசாலினி





ஆனால் இந்த சந்தேகங்களுக்கெல்லாம் சரியான பதிலைத் தந்து, தான் ஒரு இளம்மேதை என்பதை நிரூபித்து வருகிறார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பதினொரு வயதுச் சிறுமி விசாலினி. அம்மா அகில இந்திய வானொலி முன்னாள் அறிவிப்பாளர், அப்பா சாதாரண எலெக்ட்ரீஷியன்.
"நூறு பக்கம் உள்ள ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால் இருபது நிமிடத்தில் படித்த முடித்துவிடுவேன். அப்புறம் அந்தப் புத்தகத்திலிருந்து எந்த நேரத்தில் எதைக் கேட்டாலும் சொல்வேன். நான் ஒருமுறை படித்த புத்தகத்தை திரும்பப் படித்ததே கிடையாது. (அவர் படித்து முடித்த அத்தனை புத்தகங்களும் புத்தம் புதிதாக இருப்பதிலேயே அது புரிந்தது) அது எனக்கு மறக்கவே மறக்காது. பள்ளிக்கூட பாடத்தை எல்லாம் மொத்த பாடத்தையும் மூன்றே மாதத்தில் படித்து முடித்து விடுவேன். அப்புறம் பள்ளிக்கூடம் போர்தான்!' என்று படபடவென்று துடிப்பாய் பேசும் விசாலினி பத்து வயதில் எட்டாம் வகுப்பை எட்டிவிட்டார். அது தவிர வீடு நிறைய அவர் படித்து முடித்த புத்தகக் குவியல்கள்... அவற்றில் பல பி.ஈ., எம்.பி.ஏ. மாணவர்கள் படிக்கும் புத்தகங்கள். "இதெல்லாம் எதற்கு படிக்கிறாள்?' என்று அவர் தாய் ராகமாலிகாவிடம் கேட்டோம்.
"இவளுடைய வேகத்திற்கு நாம் படிக்க எதாவது கொடுத்துக்கொண்டே இருக்கணும் இல்லன்னா கவனம் தவறான வழிகளில் திரும்பிடும்... ஏன்னா அவள் பிரைன் அப்படி? நார்மலா ஒரு மனுஷனுக்கு "நுண்ணறிவுத்திறன் ஈவு' என்கிற வெலவ் Inteligent Quotent 90-ல் இருந்து 110 வரை இருக்கும். பிரபல மேடை பாடகி மடோனாவுக்கு இந்த IQ அளவு 140. பில்கேட்ஸின் IQ அளவு 160. உலகிலேயே இதுவரை IQ அளவு அதிகம் உள்ள நபர்னு தென்கொரியாவைச் சேர்ந்த கிங் உங் யங் என்பவரைச் சொல்வாங்க. அவரோட IQ அளவுகூட 200தான். ஆனால் விசாலினியைப் பொருத்தவரை இவளோட IQ லெவல் 225ன்னு ஆய்வு செய்து சொல்லியிருக்காங்க.
இதற்கு அடையாளம்தான் அவள் எழுதி வெற்றி பெற்றுள்ள தேர்வுகள்.
பில்கேட்ஸின் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் நடத்தும் MCP என்கிற தேர்வை மார்ச் மாதம் 21-ஆம் தேதி எழுதினாள். அதுல 87% மார்க். அப்புறம் அதைவிட கஷ்டமான சின்கோ சர்டிஃபைட் நெட்ஒர்க் அசோசியேஷன் (CCNA) தேர்வில் 90% எடுத்தாள். கடந்த ஜூலை 4-ம் தேதி அவங்களே நடத்தும் CCNA செக்யூரிட்டி என்கிற தேர்வையும் எழுதி 98% வாங்கியிருக்கா....
இந்தத் தேர்வுகள் எல்லாமே பொறியியல், எம்.பி.ஏ. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் தங்கள் அறிவுத்திறனை நிரூபிக்க எழுதுபவை. உலகளவில் சாஃப்ட்வேர், நெட்வொர்க்கிங் இண்டஸ்ட்ரியில் வேலை கிடைப்பதற்காக எழுதப்படும் தேர்வுகள். இதில் வெற்றி பெறுபவர்கள் பெரிய பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் உட்காரலாம். விசாலினி இது எல்லாத்தையும் இப்பொழுதே பாஸ் பண்ணிட்டா... இனி எங்கேயும் வேலைக்குச் சேரலாம். ஆனா அதுக்கு அடிப்படை கல்வித் தகுதி வேணுமே... விட்டா இப்பொழுதே கூட பி.ஈ பாஸ் பண்ணுவா. ஆனால் அதுக்கு குறைந்தபட்சம் எட்டாவது பாஸ் ஆகணும். அதற்கு பதினொரு வயதில் எட்டாவது தேர்வு எழுத சிறப்பு அனுமதி கிடைக்கணும். அதைத் தருவதாக கவர்மென்ட்ல சொல்லியிருக்காங்க... அதைத் தருவதாக கவர்மென்ட்ல சொல்லியிருக்காங்க... அதைத்தான் விசாலி எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா!
இவளைப் போலவே பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் பன்னிரண்டு வயதில் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றான். அவனை பாகிஸ்தான் இராணுவம் "PRIDE OF PAKISTAN' என்று இராணுவ வெப்சைட்டில் போட்டு கௌரவித்தது. ஆனால் அவனைவிட இரண்டு வயது குறைவான நிலையில் விசாலினி அதைவிட பெரிய சாதனைகள் செய்தும் "PRIDE OF INDIA' என்று பாராட்ட ஆள் இல்லை!
விவரம் தெரிந்தவர்கள் இவளைப் பற்றி வெப்சைட்டில் பார்த்துவிட்டு அமெரிக்காவில் இருந்தெல்லாம் போனில் பாராட்டுகிறார்கள். ஆனால் உலகளவில் எவ்வளவு பாராட்டு கிடைத்தாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டு வாங்கணும்கிறதுதான் விசாலினிக்கு ஒரே கனவு..' என்று தன் மகளின் கனவைப் பற்றி சொல்கிறார் தாய் ராகமாலிகா.
அந்தக் கனவு நனவாகவும் விசாலினி பெரிய விஞ்ஞானியாக வளரவும் வாழ்த்து சொல்லி விடை பெற்றோம்!
நன்றி: http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=6320&ncat=18
தொடர்புக்கு: http://www.visalini.com

Tuesday, May 03, 2011

முதல் மேடை

வண்ணத் தோரண்ங்கள்
கண் கவர் மேடை
கை தட்டலோடு
எறினேன் முதல் படிக்கட்டு

கருப்பு கரைவேட்டி
கதர் ஆடை துண்டோடு
மேடை முன் அமர்ந்தவனை
மேலே அழைத்தது ஏன்?

என்ன படித்தான், தெரியவில்லை
என்ன நடக்கிறது, புரியவில்லை
யார் இவர்கள், அறியவில்லை
பள்ளிகூட வாசம், அறிந்தல்லை

பாராட்டும் பரிசும் பெற்றுக்கொண்டு
பக்கத்தில் இவனின் மகன்
முனைவர் பட்டம் அடைந்தற்க்கு
முதுகெலும்பு இவர்தான் என்றான்

வள்ளுவனின் ஒலி வடிவத்திற்க்கு
இவன் உயிர் வடிவம் குடுத்தான்
தந்தை மகற்க்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

Saturday, March 26, 2011

மல்லிகைத் தோட்டம்

காலைத் தென்றலில் கலந்திருந்த
உன் மணம் எழுப்பியது
உறங்கிக்கொண்டிருந்த
என் உயிர் தொட்டு - பார்த்தால்
அளவில்லா மலர்களை அள்ளிச்
சூடிக்கொண்டு அமைதியாய்
என் கண்முன்னே நீ

மாலை நீ சூடிய மல்லியில்
தேனெடுக்க
உன்னையே சுற்றிச் சுற்றி வந்த
வண்டின் ரீங்காரம்
இரெவெல்லாம்
காதுகளுக்குத் தேன் மதுரமாய்

ஓலைகளில் மாளிகை கட்டிக்
குடியேரியச் சிட்டுக்கள்
விடியலுக்கு முன் இறைதேடிச் செல்ல
விழித்தேன் உன் எதிரில்

இரெவெல்லாம் இளவரசியாய் இருந்தவள்
உதிரத்தொடிங்கினால் விடியலை எதிர்பார்த்து
அவளுக்கு மேல்
பனிநீரில் இரவெல்லாம் குளித்து விட்டு
மாலைப் பொழுதை எதிர் பார்த்து
மலர்வதர்க்காக ஒரு மொட்டு

Tuesday, January 18, 2011

தமிழ்ப் புத்தாண்டு


எத்துனை செழிய பண்பாடு - தமிழா
அதை காக்க சிறிது பாடுபடு
ஆரிய தாக்கம் இருப்பதால் - ஏனோ
நமக்குள்ளே சில முரண்பாடு

ஆங்கில அறிவு தவறில்லை அதற்க்கு
தமிழைக் கைவிடுவது முறையில்லை
நடைமுறைக்கு ஏற்றுக் கொள்கிறோம்
சில மாற்றங்கள்
ஆனால் மாற்றப்படலாமோ நம் உணர்வுகள்

ஆரியரையும் அந்நியர்களையும் கூட
அழியாப் புகழில் தள்ளியது
நம் தாய் மொழி
தமிழ் வளர்க்க இன்னும்
புலப்படவில்லை ஒருவழி

அரிய தமிழ்ச் சொற்க்கள் அழிந்ததோ
எத்தனை எத்தனை
அம்மா என்று அழைப்பது கூட
இன்றைய நடைமுறையில் அழிகிறது

பாலுட்டிய அன்னையும்
சீர்படுத்திய தந்தையும்
சிதைந்த ஓவியங்களாய் முதியோரில்லத்தில்
நம் பண்பாட்டை நாமே மறக்கலாமா
அந்நிய மோகத்தில் திலைத்துக் கிடக்கலாமா

வாழ்த்துவதும் வரவேற்ப்பதும்
அமிழ்தென்றால் கூட பகிர்ந்துன்பதல்லவோ
நம் பண்பாடு
இவை மறந்ததாலின்று தமிழகத்தில்
கேட்கிறது சில கூப்பாடு

மன்றம் வைத்து வளர்த்த மொழி
சிதைக்கபடும் போதும் அழிக்கப்படும் போதும்
வேடிக்கை பார்க்க நாமென்ன
மரக்கட்டைகளா இல்லை
மண்ணுருண்டைகளா

அறம் செய்து நெறியோடு வாழ்ந்த வீரனே
உடனே புறப்படு
உலகின் முதற்குடி நீயென்பதை உறுதி செய்
செந்தமிழின் சிறப்பினை உலகறியச்செய்
ஒன்றே முக்கால் அடியில் உலகைப்பார்தவன்
உன் இனமன்றோ

கதிரவனுக்கு நன்றி சொல்லும் நன்னலே
தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததென்று கூறும் திருநாளே
வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்
மண்ணோடு கலந்தாலும் தமிழ்
நம்மோடு கலந்திருக்கட்டும்